நாம் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம் உண்டு. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை வரிசையாக வைத்து கொண்டாடுவது என்று
சொல்லப்படுகிறது. முதலில் வட இந்தியாவில் சமண மதத்தவரால் (மார்வாடிகள்)
கொண்டாடப்பட்டு பின்பு பரவி மற்ற
இடங்களிலும் உள்ள இந்துக்களும் கொண்டாடும் பண்டிகையானது.
தீபாவளி பண்டிகையை அவர்கள் புத்தாண்டின்
தொடக்கமாக பார்க்கிறார்கள். புது கணக்கு
ஆரம்பித்து வியாபாரம் தொடங்க ஒரு நல்ல நாளாக லட்சுமி பூஜை செய்து
கொண்டாடுகிறார்கள். இவர்களுடன் வரவு-செலவு வைத்திருக்கும் நம்மவர்களுக்கு இது
தெரியும். இதுதான் உண்மையான காரணமும் கூட. மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு
அன்று விடுமுறை கிடையாது. MUHURAT
TRADING என்று ஒரு சிறப்பு வர்த்தகமும் அன்று நடைபெறும்.
ஆனால், பார்ப்பனர்கள் தீபாவளி கொண்டாட காரணமாக ஒரு கதை சொல்லி வருகிறார்கள். அசுரனை அழித்ததற்க்கான விழாவாம். அசுரன் என்பவன் யார் என்றால் ஆரியர்களின்
பகைவனாம். ஆர்யர்களின் பகை என்றால் ஆதியில் திராவிடர்தான். அப்படி என்றால் நம்மை அழித்ததற்கு நாமே விழா
எடுத்து கொண்டாடுவதா? நம் மக்கள்
இதையும் நம்பி மதி மயங்கி உள்ளனர். இது
பொய்யான கதை. தீபாவளிக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த பொய்யான கதைகளை மறுத்து,
தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
திருமுருக. கிருபானந்த வாரியார்
கா. சுப்ரமணிய பிள்ளை
பேராசிரியர் அ. கி. பரந்தாமனார்
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.
வேங்கடசாமி
டாக்டர்
மா. இராசமாணிக்கனார்
போன்ற தமிழ் அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்து
தாங்கள் எழுதிய புத்தகங்களில் பதிவு செய்யுதுள்ளனர்.
பார்ப்பனர்களின் சூழ்ச்சியான கதைகளை நம்ப
வேண்டாமென தந்தை பெரியாராலும்
வலியுறுத்தப்பட்டது.
இப்படி
சொல்லப்பட்டுள்ள கதையும் அறிவுக்கு சம்பந்தமில்லாமல், மேலும் ஆபாசம் நிறைந்தாக உள்ளது. ஒரு அசுரன்
பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு எடுத்துக் கடலில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து அவனை அழித்து பூமியை மீட்டதாகவும், பூமித்தாய்
பன்றியின் மீது காதல் கொண்டு சேர்ந்ததால் இன்னொரு அசுரன் பிறந்ததாகவும், அவன்
சுரர்களுக்கு (சுரா என்ற மதுவை குடிப்பதால் தேவர்கள் சுரர்கள். தேவர் அல்லாதவர் அசுரர்) தொல்லையாக இருந்ததால் அவனையும் கிருஷ்ண அவதாரம்
எடுத்து அழித்ததாக கதை.
எவனோ ஒரு முட்டாள் பரதேசி இஷ்டத்திற்கு கதை
சொல்லுவான். நாமும் அதை ஆமாம் என்று
கேட்டுக்கொண்டு கொண்டாட வேண்டுமாம். என்ன கொடுமை இது?
பண்டிகை என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி.
வாழ்க்கையில் பண்டிகைகளை கொண்டாடத்தான் வேண்டும். தீபாவளியை கொண்டாடுவோம். (அசுரனை அழித்ததின் அடையாளமாக என்ற அபத்தமான
கதையின் அடிப்படையில் அல்ல)
வாழ்வில் நல்லதொரு தொடக்கம் அமையட்டும். உங்கள் வியாபாரம் நன்றாக தொடங்கட்டும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற விளக்கு
வரிசையாக ஒளி வீசட்டும். இதுதான் தீபாவளி.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment