நாம் கொண்டாடும்
முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும்
ஒன்று. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம்
உண்டு. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை வரிசையாக வைத்து கொண்டாடுவது என்று
சொல்லப்படுகிறது. முதலில் வட இந்தியாவில் சமண மதத்தவரால் (மார்வாடிகள்)
கொண்டாடப்பட்டு பின்பு பரவி மற்ற இடங்களிலும் உள்ள இந்துக்களும் கொண்டாடும்
பண்டிகையானது.
தீபாவளி பண்டிகையை அவர்கள்
புத்தாண்டின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.
புது கணக்கு ஆரம்பித்து வியாபாரம் தொடங்க ஒரு நல்ல நாளாக லட்சுமி பூஜை
செய்து கொண்டாடுகிறார்கள். இவர்களுடன் வரவு-செலவு வைத்திருக்கும் நம்மவர்களுக்கு
இது தெரியும். இதுதான் உண்மையான காரணமும்
கூட. மும்பை மற்றும் தேசிய பங்கு
சந்தைகளுக்கு அன்று விடுமுறை கிடையாது. MUHURAT TRADING என்று
ஒரு சிறப்பு வர்த்தகமும் அன்று நடைபெறும்.
இந்த பொய்யான கதைகளை மறுத்து,
கா. சுப்ரமணிய பிள்ளை
பேராசிரியர் அ. கி. பரந்தாமனார்
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
டாக்டர் மா. இராசமாணிக்கனார்
1.
பண்டிகை என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி.
வாழ்க்கையில் பண்டிகைகளை கொண்டாடத்தான் வேண்டும்.
காலப்போக்கில் சில காணாமல் போகலாம். சில பண்டிகைகள் புதிதாக வரலாம்.
2.
நம் மக்களுக்கு, தை மாதத்தில் கொண்டாடும் பொங்கலுக்கு
பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பெரிய பண்டிகை எதுவும் இல்லை. நீண்ட காலம்
கழித்து வருவதால் தீபாவளியை பெரியதாக கொண்டாடுவதாக இருக்கலாம்.
3.
அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இன்னும் பிற
முதலாளிகள் அனைவரும் இந்த ஆயுத பூஜை, தீபாவளி சமயத்தில்தான் வருடாந்திர
ஊக்கத்தொகை, அன்பளிப்புகள் போன்றவைகளை கொடுக்கிறார்கள். எனவே, நடுத்தர மற்றும்
சாமானிய மக்களுக்கு புத்தாடை எடுப்பது, பட்டாசு வெடிப்பது, மருமகனுக்கு விருந்து
வைப்பது போன்றவை கொஞ்சம் எளிதாகிறது.
தீபாவளியை
கொண்டாடுவோம். (அசுரனை அழித்ததின்
அடையாளமாக என்ற அபத்தமான கதையின் அடிப்படையில் அல்ல)