Sunday, September 15, 2013

விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் விநாயக கடவுள் ஆதி முதல் இருந்தாக வரலாறு இல்லை.  இடையில் பல்லவ மன்னர்களால் வாதாபியிலிருந்து போரின் போது கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது.

சமீபமாக சில பல ஆண்டுகளாக  தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.  பிரம்மாண்ட சிலைகள் அமைப்பது,  பின்பு அதனை கடல்,  ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பது என நிகழ்ந்து வருகிறது.

விஷயம் என்னவென்றால்,  நேற்று சென்னையில் இருபது கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகர் சிலையை இவ்வாறு கடலில் போட்டு உள்ளனர். இதன் மதிப்பு சுமார்  ரூபாய் பத்து லட்சம் .  இந்த பத்து லட்சத்தை கடவுளின் பெயரால் கடலில் போடத்தான் வேண்டுமா? 

எத்தனை மக்கள் உணவுக்கு கஷ்டபடும்  நிலையில்,  எவ்வளவு குழந்தைகள் திறமை இருந்தும் படிக்க வசதியில்லாத நிலையில், எவ்வளவு மக்கள் நோய் கண்டு குணப்படுத்த பணம் இன்றி இருக்கும் நிலையில், இப்படி பத்து லட்சம் ரூபாயை வீணடிப்பது எவ்வளவு அறிவீனம்?


இந்த செயலை அந்த விநாயகரே மன்னிக்க மாட்டார்.  


















No comments:

Post a Comment